/////இன்று (7-5-2016) அன்று காரைக்குடி கம்பன் கழகத்தின் மே மாதக் கம்பன்
திருவிழா மாலை ஆறுமணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண
மண்டபத்தில் நடைபெற்றது. திருமிகு கவிதா
அவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் காரைக்குடி கம்பன்
கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார்.
இவ்விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் தலைமை வகித்தார். கம்பன் கழகப் பணிகள் பற்றிச் சிறப்புடன் உரைத்தார். சந்திர மண்டலத்தில் மனிதன் செல்லும் காலம் வந்தால் அந்தக் காலத்தில் தமிழ் அமைப்பு ஒன்று அங்குத் தொடங்கப்பெற்றால் அது காரைக்குடி கம்பன் கழகத்தின் கிளைக் கழகமாகத் தான் இருக்கும் என்றார். அந்த அளவு இலக்கியப் பணிகளைக் காரைக்குடி கம்பன் கழகம் ஆற்றிவருகிறது. என்றார் அவர். ////
திரு வேதானந்தா ஓமெனும் பிரணவம் ஒலிக்கப் பேசியது இன்னும் கணீரென்று காதுக்குள் ஒலிக்கிறது. நவநீத கைவல்யம் என்னும் தலைப்பில் திருக்கோயிலூர் மடத்தில் உரையாற்ற வந்திருந்த வேதானந்தா சுவாமிகள், தவத்திரு ஊரன் அடிகள், சின்மயா மிஷனின் துறவி திரு இராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் ஆகியோர் தங்கள் உரைகளால் நேற்றையப் பொழுதைச் சிறப்பித்திருந்தனர்.
இவ்விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் தலைமை வகித்தார். கம்பன் கழகப் பணிகள் பற்றிச் சிறப்புடன் உரைத்தார். சந்திர மண்டலத்தில் மனிதன் செல்லும் காலம் வந்தால் அந்தக் காலத்தில் தமிழ் அமைப்பு ஒன்று அங்குத் தொடங்கப்பெற்றால் அது காரைக்குடி கம்பன் கழகத்தின் கிளைக் கழகமாகத் தான் இருக்கும் என்றார். அந்த அளவு இலக்கியப் பணிகளைக் காரைக்குடி கம்பன் கழகம் ஆற்றிவருகிறது. என்றார் அவர். ////
திரு வேதானந்தா ஓமெனும் பிரணவம் ஒலிக்கப் பேசியது இன்னும் கணீரென்று காதுக்குள் ஒலிக்கிறது. நவநீத கைவல்யம் என்னும் தலைப்பில் திருக்கோயிலூர் மடத்தில் உரையாற்ற வந்திருந்த வேதானந்தா சுவாமிகள், தவத்திரு ஊரன் அடிகள், சின்மயா மிஷனின் துறவி திரு இராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் ஆகியோர் தங்கள் உரைகளால் நேற்றையப் பொழுதைச் சிறப்பித்திருந்தனர்.