எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2015

புதிய பார்வை :- வாசகர் கடிதம்.

மதுரையில் இருந்து புதிய பார்வை என்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. ஆசிரியர் அகமுடை நம்பி. அறிவுடை நம்பி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்தப் புதிய பார்வையில் வெளியான சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதம் இது.

வேலை கிடைச்சிட்டுது என்ற சிறுகதை வெளியாகி இருந்தது.

அந்த சிறுகதை இதுதான்.

புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை. 

அதற்குத் திருவிடை மருதூரைச் சேர்ந்த எழில்வேந்தன் என்பவர் வாழ்த்துக் கடிதம் எழுதி இருக்கிறார்.

சனி, 30 மே, 2015

சின்னச் சின்ன சந்தோஷங்கள். :)

பீபிள்ஸ் டுடேயின் சப் எடிட்டர் உமாகாந்த் திருக்குமரன் தான் வாங்கிய புத்தகங்களை முகநூலில் முகப்புப் படமாகப் போட்டிருந்தார். ஆஹா அஞ்ஞாடிக்குப் பக்கத்தில் அன்ன பட்சி. என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி :)


ஃபேஸ்புக் முரசில் ஒன் லைனர்.

ஃபேஸ்புக் முரசில் ஒரு ஒன்லைனர் கேட்டு இன்பாக்ஸில் போடச் சொல்லி இருந்தார்கள். அதுதான் இது :)

தேன் பாடல்கள். பொன் வீதியில் மானும் முயலும் மயிலும்.

341. தோளின் மேலே பாரம் இல்லை.


 கல்லூரிப் பருவத்தில் வசந்தி அக்கா டான்ஸ் ஆடிய பாடல் என்பதால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  கார்த்திக் திலிப் ஆடும் பாடல் காட்சி அப்போ க்ரூப்பாக இந்த ஸ்டைலில் கிடார் எல்லாம் வைத்துக் கொண்டு ஆடுவது புதுசு. அக்கா ஆடிய ஹாஸ்டல்டே டான்ஸில் பின்பக்கம் ஒரு ஓடம் திரையின் பின்னால் நிழலாக அசைய முன்பக்கம் ஒரு கறுப்பு ட்ரெஸ்ஸில் வெள்ளையாக பெயிண்ட் அடிக்கப்பட்ட ஸ்கெலிடன் போல ஆடியது 1982 இல் ரொம்பவே புதுசு. கட்டறுக்கும் காளைப்பருவம் ஆனால் இந்தப் பாட்டை இப்போதுதான் பார்த்தேன்.

342. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்

மிக அருமையான சந்த நயம் மிகுந்த பாடல். கவிதா முத்துராமன் ஜோடி. காற்றினிலே வரும் கீதம் படம். பெரும்பாலான படங்களும் பாடல்களுமே கூடப் பார்த்திருக்கமாட்டேன் ஆனால் இசையும் குரலும் குழையும் அற்புதம் இந்தப் பாடலில் கவர்ந்திழுக்கும். அதே போல ஹொகனேக்கலில் தெறிக்கும் சாரலில் ஒரு வானவில்லும் உருவாகி இருக்கும். 

வியாழன், 28 மே, 2015

குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.



37.எண் விளையாட்டு./காகுரே. 

இது தினமலர்ல வந்துகிட்டு இருக்கு சுடோகு போலத்தான். இதுக்குப் பேரு காகுரே.இது குறுக்கெழுத்துப் புதிர்போலக் கட்டங்களில் சில எண்களை அங்கங்கே கொடுத்திருப்பாங்க. மேல் கீழா, இடம் வலமாக் கூட்டினா நமக்கு அந்தக் கூட்டுத் தொகையில் வரணும். வந்த எண்ணே வரக்கூடாது. மூணு கட்டம் கொடுத்து 18 ந்னு கொடுத்திருந்தா 9 +1 +8 இல்லைன்னா 9+2+7 , 9+3+6, 9+5+4 ,5+6+7, 4+6+8 , 7+3+8 இன்னு வரும். நாலு கட்டம்னா 9+1+2+6 இல்லைன்னா 9+1+3+5, 9+2+3+4, 8+1+2+7, 8+2+3+5, 8+1+4+5, 8+1+3+6, 8+1+5+4, அண்ட் சோ ஆன் இருக்கும்.. J

38.வார்த்தை விளையாட்டு./குறுக்கெழுத்துப் புதிர்.

பன்னெடுங்காலமா விளையாடின விளையாட்டு இது. தினமலர் வாரமலர்ல வருது. ஒரு க்ளூ கொடுத்திருப்பாங்க. மேலும் கீழும் வலமும் இடமும் இதை ஃபில்லப் செய்யணும். இத ஃபில் பண்ணி அனுப்பினா ப்ரைஸ் எல்லாம் உண்டுன்னு அறிவிச்சிருப்பாங்க ராணிமுத்துவுல. J

புதன், 27 மே, 2015

திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-



திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-

குவாலியர் கோட்டை. கோடையில் கொழுந்துவிட்டெறிகிறது குவாலியர் மாநகரம்.அதைவிட அதிகமாய் அங்கே கொழுந்து விட்டெறிகிறது ஜௌஹார்குண்ட் என்னும் நெருப்புக் குண்டம். வண்ண வண்ணமாக கண்ணாடிகள் பதித்த உடையணிந்த அழகும் இளமையும் நளினமும் நிரம்பிய ராஜபுதனத்துப் பெண்கள் நிரம்பியிருக்கின்றார்கள் நெருப்புக்குண்டத்தின் முன். சம்சுதீர் அல்துமிஷின் படைகள் ஆக்கிரமிக்கப் போகின்றன கோட்டையை. ராஜா இறந்தபின் ராணிகள் மீதும் ஆக்கிரமிப்பு நடந்துவிடும். அதைப் போன்ற ஒரு அவலம் நிகழ்ந்துவிடும்முன் ராணிகள் அனைவரும் அங்கே அரண்மனைக்கு நீர் வழங்கிக்கொண்டிருந்த குளத்தில் குதித்து உயிரிழக்கின்றார்கள். மிச்சமுள்ளவர்கள் ஜௌஹார் குண்டத்தில் தீப்பாய்கிறார்கள். எங்கும் பரவுகிறது சதியின் வாசனை. சதி தேவிகள் பதிவிரதா தேவிகள் என்று வணங்கப்படுகின்றார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...