1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
உண்மைதான். இரயில் ஒரு அழகான ராட்சசன். எப்போதும் அவன் ஓடிவரும் அழகைக் காணக் காத்திருப்பேன். என் முதல் இரயில் பயணம் அறந்தாங்கியிலிருந்து பட்டுக்கோட்டை என நினைவு. காரைக்குடியில் இருந்து அறந்தாங்கிக்கு பஸ்ஸிலும், அங்கேயிருந்து பட்டுக்கோட்டைக்கு ட்ரெயினிலும், அதன்பின் ஸ்டேஷனிலிருந்து ஜட்கா ( குதிரை ) வண்டியில் பஸ்ஸ்டாண்டுக்குப் போய் மன்னார்குடிக்கு ( ராஜமன்னார்குடி) பஸ்ஸிலும் செல்வோம். அப்போதெல்லாம் கரியை எரிபொருளாய்வைத்து ஓடும் ரயில் வண்டியில் ஜன்னலோரம் அமர்ந்தால் கண்களில் கரித்தூசி விழுவது நிச்சயம். கண்களைக் கசக்கிகொண்டே பயணிப்பதும் அதன் தாலாட்டில் உறங்குவதும் உலகமகா இன்பங்கள்.
2. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
என் கணவருடன் செல்லும் எல்லாப் பயணங்களும் மகிழ்ச்சியான பயணங்கள்தான்.
ஆனால் முதன் முதலில் 2009 செப்டம்பரில் துபாய்க்கு ஃப்ளைட்டில் சென்றது மிக மிக மறக்க
முடியாத அனுபவம். ஏர்போர்ட்டில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது. ஒரே
பிரமிப்பு. பறக்கும்போது தலை சுத்துமோ என்றெல்லாம் கவலை. முதல் ஃப்ளைட் பயணம். என்
மூத்த மகன் வந்ததால் நானும் என் பெற்றோரும் கவலையில்லாமல் பயணம் செய்தோம். அதிலும்
முக்கியமான விஷயம் என்னவென்றால் துபாயில் இருக்கும் என் தம்பி மெய்யப்பன் நாங்கள் அனைவரும்
அவன் அங்கே இருக்கும்போது ஒரு முறையாவது அவன் வீட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக
இங்கேயிருந்து ஃப்ளைட்டில் கால் எடுத்து வைப்பதில் இருந்து திரும்ப வீட்டில் இறங்கி
வந்து அமரும் வரை உள்ள ஒவ்வொரு திர்ஹாமையும் செலவு செய்தான். மேப் போல போட்டே அனுப்பி
விட்டான். பாஸ்போர்ட் எடுத்தோம். விசா இன்சூரன்ஸ் எல்லாம் அவன்தான்.
பணத்தைப் பற்றிய கவலை இல்லை. ஏன் எதைப் பற்றிய கவலையுமே இல்லை. அவன் பாதுகாப்பில் பராமரிப்பில் ஒரு மாதமும் குழந்தைகளைப் போலக் குதூகலமாய்த் திரிந்தோம். அவன் மனைவியும் மிக அருமையான பெண். பெட்டர் ஹாஃப் என்பார்களே அதைப் போல. அவன் கொடுத்தது போக தினம் தினம் நூறு திர்ஹாம் செலவுக்கும் J அதன் பின் திரும்பி வரும்போது ஆளுக்கு ஆயிரம் திர்ஹாமும் அவர் பங்களிப்பாகக் கொடுத்தார். அதை அங்கேயே தங்கமாக வாங்கி வந்துவிட்டோம்.
அதன் பின் 4 வருடங்கள் கழித்து இன்னொரு பயணமும் போய் வந்து விட்டோம். அதேபோல் இந்தத் தரமும் எல்லா செலவும் தம்பியுடையதே. அங்கே ஷார்ஜா மான்யுமெண்ட், மியூசியம், எமிரேட் மால், லூலூ மால்,இபுன் படாடா மால், அட்லாண்டிஸ், டால்ஃபின் ஷோ, வொண்டர் பஸ், க்ரீக் பார்க், ஆப்ராவில் பயணம், புர்ஜ் அல் அராப், புர்ஜ் கலீஃபா, (உலகத்திலேயே உயரமான டவர்.) ஆகியன பார்த்தோம். மறக்க இயலாதவை.
அதே சகோதரன் குடும்பத்தாரோடு அறுபடை முருகன்களைத் தரிசித்ததும், சென்றவருடம் ஹைதையிலிருந்து ஃப்ளைட்டில் மும்பை சென்று அங்கேயும் ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்ததும் மறக்க இயலாதது. (கணவருடன் சிங்கப்பூர், மலேஷியா சென்று வந்ததும் இனிய அனுபவம் )
பணத்தைப் பற்றிய கவலை இல்லை. ஏன் எதைப் பற்றிய கவலையுமே இல்லை. அவன் பாதுகாப்பில் பராமரிப்பில் ஒரு மாதமும் குழந்தைகளைப் போலக் குதூகலமாய்த் திரிந்தோம். அவன் மனைவியும் மிக அருமையான பெண். பெட்டர் ஹாஃப் என்பார்களே அதைப் போல. அவன் கொடுத்தது போக தினம் தினம் நூறு திர்ஹாம் செலவுக்கும் J அதன் பின் திரும்பி வரும்போது ஆளுக்கு ஆயிரம் திர்ஹாமும் அவர் பங்களிப்பாகக் கொடுத்தார். அதை அங்கேயே தங்கமாக வாங்கி வந்துவிட்டோம்.
அதன் பின் 4 வருடங்கள் கழித்து இன்னொரு பயணமும் போய் வந்து விட்டோம். அதேபோல் இந்தத் தரமும் எல்லா செலவும் தம்பியுடையதே. அங்கே ஷார்ஜா மான்யுமெண்ட், மியூசியம், எமிரேட் மால், லூலூ மால்,இபுன் படாடா மால், அட்லாண்டிஸ், டால்ஃபின் ஷோ, வொண்டர் பஸ், க்ரீக் பார்க், ஆப்ராவில் பயணம், புர்ஜ் அல் அராப், புர்ஜ் கலீஃபா, (உலகத்திலேயே உயரமான டவர்.) ஆகியன பார்த்தோம். மறக்க இயலாதவை.
அதே சகோதரன் குடும்பத்தாரோடு அறுபடை முருகன்களைத் தரிசித்ததும், சென்றவருடம் ஹைதையிலிருந்து ஃப்ளைட்டில் மும்பை சென்று அங்கேயும் ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்ததும் மறக்க இயலாதது. (கணவருடன் சிங்கப்பூர், மலேஷியா சென்று வந்ததும் இனிய அனுபவம் )