எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நகுலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகுலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நகுலன் - ஒரு மாயவெளிச் சிற்பம்.

காரைக்குடி கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பன் அடிசூடி திரு பழ.பழனியப்பன் அவர்களும், திரு. முத்துப் பழனியப்பன் அவர்களும் நூற்றாண்டு காணும் அறிஞர்கள் பற்றிய காணொலிகளைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றார்கள். அதற்காக என்னிடம் நகுலன் பற்றி ஒரு காணொலி எடுத்து அனுப்பும்படிக் கேட்டிருந்தார்கள். அதற்காகத் தொகுத்த குறிப்புகளை இங்கே அளித்துள்ளேன். இதன் யூ ட்யூப் லிங்க். 

நகுலன் I ஒரு மாயவெளிச் சிற்பம் I தேனம்மை லெக்ஷ்மணன்




காரைக்குடி கம்பன் கழகம், வாழ்த்து, நகுலன் நூற்றாண்டு விழா. இதுபோல் பிற அறிஞர்களின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடும் கம்பன் கழகம்.

Writers writer – எழுத்தாளர்களின் எழுத்தாளர். எழுத்தாளர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர்.

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

சகோதரனுக்காய் உயிர்வரம் கேட்ட அண்ணன்

சகோதரனுக்காய் உயிர்வரம் கேட்ட அண்ணன்

ஒரு தாய்க்கு எத்தனை மகன்கள் இருந்தாலும் அத்தனை பேரும் சமம்தான். அதேபோல்தான் ஒரு அண்ணன் இருந்தான் அவனுக்குத் தன் தம்பியர் நால்வரும் உயிர்போன்றவர்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் தன் மூன்றாவது சகோதரனை முக்கியமாகக் கருதி உயிர்வரம் கேட்டான். அது ஏன் எனப் பார்ப்போம் குழந்தைகளே.

வெள்ளி, 31 ஜூலை, 2020

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒரு பார்வை.

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

புதன், 11 மார்ச், 2020

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி. தினமலர் சிறுவர்மலர் - 55.

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி
பறவைகள் ப்ராணிகளின் மொழி அறிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காக்கை காகாவெனக் கரைவதையும் கிளி கிக்கீ எனப் பேசுவதையும் குயில் குக்கூவெனக் கூவுவதையும் மட்டுமல்ல குரங்கின் கீச் கீச்சையும் நாயின் குரைப்பையும் கூட நாம் விலங்குகளின் பாஷை அறிந்தால் அவை என்ன சொல்ல வருகின்றன என்பதை அறியலாம். இப்படி குதிரைகளின் கனைப்பொலியையும் அவற்றின் உள்ளுணர்வையும் அறியும் திறனோடு ஒருவர் இருந்தார். அதனால் அவர் தனக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடிந்தது. அப்படிப்பட்டவர் யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திருதராஷ்டிரனின் குழந்தைகள் கௌரவர்கள். பாண்டுவின் குழந்தைகள் பாண்டவர்கள். இவர்களில் பாண்டுவின் முதல் மனைவி குந்திக்கு தர்மர், பீமன் அர்ஜுனர் ஆகியோரும் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரிக்கு நகுலன் சகாதேவன் ஆகியோரும் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தமையால் நகுலன் சகாதேவன் ஆகியோர் மிகுந்த அழகுடன் திகழ்ந்தார்கள். கடைக்குட்டிகள் என்ற செல்லம் வேறு. எல்லாரிலும் அழகு வாய்ந்த நகுலன் ஆயுர்வேத மருத்துவம், வாள் பயிற்சி, குதிரை வளர்ப்பு ஆகியவற்றில் தேர்ந்தவன்.
Related Posts Plugin for WordPress, Blogger...