![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiADl1URVdFHFlnWrY6gSlooPUelcJp0kY9z2dH3D5B3l2e1vPztI9BJkKorfpD2OG9Mid3chOjE0IY686NHKeCZFLHU-IBTh36KkabENAPnzCKX2e4makfFftIWfbsyqxvJRpDWKUdYuY/s320/yum_yum_by_misskatiemae-d33nus6%255B1%255D.jpg)
1. விட்டுப் போனவை:-
**************************
ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம் ..
குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்..
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..
அதிகமசைந்து
இன்ப அதிர்ச்சியோ என்னவோ..
கை தவறிப் போட்டுடைத்தேன்..
குன்றிமணிகளாய்த் தரையில் சிதறி..
அமில ஓட்டைகள்
கத்தரித்திருந்த
சோதனைச் சாலை அங்கியோடு
தவழ்ந்தேன் தரை முழுதும் ..
ஒன்று சேர்த்துக் கோர்த்துவிடலாமென..
*****************************************************
2. வெறுப்பு:-
**************
கொலைக் கத்திகளும்
கொம்பின் முனைகளும்
முத்தமிடும் உலகில்
தாவரமாகவோ.,
காய்கறியாகவோ வாழ்வது..
கத்திரிக்கோல்களால்
நறுக்கப்படவே தினம்
செய்வதறியாது சிரிக்கும்
செந்நிற ரோஜாவாய்ப் பூத்திருப்பது..
வீட்டின் மேல் பழையதும்
வேண்டாததும் போட்டு
அடைக்கும் பரணாயும்
ட்ரெங்குப் பெட்டியாயும் இருப்பது ...
காலடி எடுத்து வாசலில் வைத்தாலே
திருவிழாவோ., தெப்பமோ
தேரோ., உலாவோ செல்லும்
அம்மனாய்த் தோன்றுவது...
பூப்பல்லக்குகளும்., வாகனங்களும்.,
கோமடங்களும் ., செங்காவியும் சூழ
வணக்கத்திற்குரிய சிலையாய்
சிறையுண்டிருப்பது..
**************************************
3. கனவு :-
**************
ஓவிய வகுப்பில்
ஓயாமல் பென்சில் திருகி...
முனை ஒடித்துக்
குட்டு வாங்கிய
குழந்தையின் இரவில்....
சாபமிட்டு விரல் முறிக்கும்
கொடுந்தேவதைகள்
முளைத்துக் கிடந்தார்கள்
கனவெங்கும்..
டிஸ்கி..1.. :- விட்டுப் போனவை என்ற என் கவிதை முதன் முதலில் உயிர்மையின் உயிரோசை நவம்பர் 29., 2010 வாரத்தொகுப்பில்.. நன்றி உயிரோசை..:))
டிஸ்கி.. 2..:- விட்டுப் போனவை., வெறுப்பு., கனவு என்ற என் மூன்று கவிதைகளும் நவம்பர் 28., 2010 திண்ணையில்.. தொடர்ந்து வெளியிட்டு வரும் திண்ணைக்கு நன்றி..:))
Vazhthukal Thenu..
பதிலளிநீக்குமூன்று கவிதைகளும் அருமை. உயிரோசையிலும் தொடர்ந்து வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள். சீக்கிரமா கவிதைத் தொகுப்பு கொண்டு வாங்க தேனம்மை.
பதிலளிநீக்குஅக்கா, எல்லா கவிதைகளும் அருமை. திண்ணையில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள், அக்கா!
பதிலளிநீக்குஉங்கள் பார்வையில் படுகிற எல்லாமே கவிதையாகிவிடுகிறது.
பதிலளிநீக்குஉயிரோசையில் உங்கள் கவிதை வந்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா :)
பதிலளிநீக்குமூன்றுமே சூப்பர் :)
அருமையான கவிதைகள்.வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குதேனக்கா அருமையான கவிதை வரிகள்..நல்லாயிருக்கு..
பதிலளிநீக்குமூன்று கவிதைகளுமே அருமை அக்கா...
பதிலளிநீக்குகூர்மையான வார்த்தைகள்....
ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்...
சூப்பர் க்கா.. :))
உயிர்மையில் வந்திருக்கா... வாவ்.. ஒன்டர்ஃபுல்!!
சீக்கிரம் நீங்க பப்ளிஷ் ஆகணும்....
அடுத்த புத்தகக் கண்காட்சியில் உங்க கவிதைத் தொட்குப்பை பார்க்க முடியும்னு தோணுதுக்கா...
அருமை அக்கா வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமூன்றும் முத்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!!!
Very nice flow.Good article
பதிலளிநீக்குVery nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
அ
பதிலளிநீக்குரு
மை
மூன்றும் முத்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
விஜய்
அருமை,நல்லாருக்கு,
பதிலளிநீக்குகலக்கலாயிருக்கு தேனக்கா.உயிரோசையில் படிதுவிட்டேன் திங்களன்றே !
இம்மூன்றும் மனதுக்கு நெருக்கமான கவிதைகள்.
பதிலளிநீக்குஅருமையான கவிதைகள்
பதிலளிநீக்குதேனக்கா,
பதிலளிநீக்குமூனாவது முதலிடத்தைப் பிடிக்குது.
கனவு கவிதை மிக அழகு.
பதிலளிநீக்குமூன்றுமே அழகான கவிதைகள்
பதிலளிநீக்குமேன்மேலும் உங்கள் கவிதைகளை வாசிக்க ஆவலாய் உள்ளேன்
கனவு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு
பதிலளிநீக்குஅழகான தேனான கவிதைகள் தேனம்மை..
பதிலளிநீக்குமூன்றும் சூப்பர்.. இரண்டு முறை படித்தேன்...
பதிலளிநீக்குநன்றி நிது., ராமலெக்ஷ்மி., சித்து., ரமேஷ்., பாலாஜி., ஸாதிகா., அஹமத்., பிரபு., சசி., சக்தி., அனு., ஸ்ரீராம்., விஜய்., ஹேமா., கலாநேசன்., ஜயந்த்., தொப்பி., சத்ரியன்., சிவகுமாரன்., வேலு., சௌந்தர்., அமைதிச்சாரல்., வினோ.,
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!