ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

மழை

குளிரும் மழையும் பொருத மாலை,
முணுமுணு தூறலில் சுவரின் ஓரம்,
சொட்டுச்சொட்டாய் தண்ணீர்க்க்ரீடம்....!

மலைமுகடில் முகமறைத்த
இளஞ்சிறு சூரியன் எதிர்ப்பட..
என் மகனின் வண்ணக்கிறுக்கலாய்
எதிர்சுவர் வானில் வானவில்...!

திரைத்துணியின் மஞ்சள் ஆரஞ்ச் கொடிகளாய்
மலைமுகடெங்கும் தங்கம் தழுவிய
தடம் கதகதப்பாய்...

தோட்டம் எங்கும் ஜாதிமல்லி,
சந்தனமுல்லை வாசம்...
சூழ்ந்த குளிர்ந்த சிரிப்பாய்...!!

ஈரத் தரையில் எங்கிருந்தோ
விதையில்லாமல் முளைத்ததுபோல்
துள்ளின தவளைகள்....!!

கூதிர்காலத்தில் இளகின நிலத்தில்
மிளிர்ந்தன மண்புழு...
இயற்கை விவசாயம்...!!

புதுப்புது உயிர்களும் புதுப்புதுப்
பயிர்களும் கிளைக்க வேண்டி
இறைவன் அருளிய இயற்கைப்பாசனம்..!!

இரவுப்பூச்சிகளின் நன்றி கானம்...
இசைக்கு அடங்கா, காதுகொள்ளா,
இரும்பூதெய்திய நவீன கானா...!!!

வெது வெது தரையில் பாதுகாப்பாக....
உலக இன்பமெல்லாம் சுற்றிக்கிடக்க...
மானிடராய்ப் பிறந்த மஹத்துவத்தில்...!!!

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)