வியாழன், 30 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்.” உரை சவுண்ட் க்ளவுடில்.

எழுத்தும் நானும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் ”எழுத்தும் நானும் “ என்ற தலைப்பில் உரையாற்ற அழைப்பு வந்தது.

அப்போது பேசியவற்றை சவுண்ட் க்ளவுடில் மகனார் பதிந்து அனுப்பி உள்ளார். அது இதோ உங்கள் பார்வைக்கு. அதாவது கேளுங்க, கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க  :)

https://soundcloud.com/sabalaksh/thennamai-lakshmanan-ezhuthum-naanum-speech?fbclid=IwAR2GtL18PY2kU3Ku3NyVKG-v1xyFUdbV2NmVppr8PVcdRwYo2n1J7Z-q540

இதையும் பாருங்க.

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

திங்கள், 27 ஜனவரி, 2020

மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2481. This susu boy resembles the Manneken Pis.

குழந்தைகள் பிறந்தபோது அம்மா குழந்தைகளுக்குக் கொடுத்த விளையாட்டுச் சாமான்களோடு இருந்தது.

கதவைத் திறந்தால் ரொட்டேட் ஆகுது. இந்த பொம்மை நிற்கும் மேடைக்குக் கீழே நீர் நிரப்பும்படி இருக்கு..

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸில் - டாய்ச்சஸ் கிளிங்கன் மியூசியம்.

கத்தி கபடாவெல்லாம் இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற சில அரண்மனை மியூசியங்களில் மட்டுமே பார்க்கமுடியும். அதேபோல்தான் ஜெர்மனியிலும் ஸோலிங்கன் அருங்காட்சியகத்திலும் கத்திகளின் அணிவகுப்பு.

தோழி கௌசியும் அவர் கணவரும் தங்கள் காரில் இந்த ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அதன் பின் பல்வேறு மராமத்துப் பணிகளால் மீண்டு அழகாக இன்னும் காட்சி அளிக்குது. 1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார்.

ராஜாவின் கோட்டை கொத்தளம் என்பதால் கேடயம்,வில்,அம்பு, தலைக்கவசம் எல்லாம் இருந்தாலும் அங்கே இருந்த மியூசியத்தில் கத்திதான் ப்ரதான அம்சம். ஏனெனில் இதை மட்டும் கண்ணாடிக் கூண்டுக்குள் பாதுகாப்பா காட்சிப்படுத்தி இருக்காங்க. :)


புதன், 22 ஜனவரி, 2020

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை. தினமலர் சிறுவர் மலர் - 49.

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை.
நல்லவர் ஒருவர் எந்தக் காரணமும் இல்லாமலே துயர்ப்பட நேரும். அது அவங்க தப்பு இல்லை. தன் துர்நோக்கம் நிறைவேற அவங்களை இப்பிடிப் பகடைக்காயா சிலர் பயன்படுத்திக்குவாங்க. அப்படிப்பட்ட துர்நோக்கம் கொண்ட சூர்ப்பனகை தன் எண்ணம் நிறைவேற ஒன்றுமறியா சீதையைப் பகடையாகப் பயன்படுத்திக்கிட்டா. உள்ளபடி அவள் காழ்ப்புணர்வு சீதை மேலே இல்லை. பின்னே யார் மேலேன்னு பார்க்கலாம் வாங்க குழந்தைகளே.
பிரம்மாவின் புத்திரர் புலத்திய மகரிஷி. அவரது மகனான விச்ரவசுவுக்கும் அவரது இரண்டாம் மனைவியான கேசிக்கும் பிறந்தவர்கள்தான் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.
சூர்ப்பணகைக்கு உரிய பருவம் வந்ததும் காலகேயர் என்னும் தங்கநிற அரக்கர் வம்சத்தைச் சார்ந்த வித்யுத்சிகுவன் என்பாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சூர்ப்பணகையும் இயல்பிலேயே அழகானவள். இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருமுறை இராவணன் தன் புஜபராக்கிரமத்தைக் காட்ட வேண்டிக் காலகேயர்களுடன் போரிட்டான். அப்போது வித்யுத்சிகுவனை சூழ்ச்சி செய்து இராவணன் கொன்று விடுகிறான். இதைக்கேட்டுத் துடித்த சூர்ப்பணகை போர்க்களத்துக்கு ஓடிவருகிறாள். அண்ணனாயினும் தன் கணவன் சாவுக்குக் காரணமானவனை அதே போல் சூழ்ச்சியால் வெல்வேன் என சபதமேற்கிறாள்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஐபிசிஎன் - 2019 நூல். IBCN - 2019.


ஐபிசிஎன் - 2019 நூல். 


துபாயில் 2017 இல் நடைபெற்ற ஐபிசிஎன் மாநாட்டையும் அதில் இடம்பெற்ற தொழில் முனைவோரின் பேட்டிகளையும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். இதில் எண்டர்ப்ரைனர்ஸ் ஆஃப் தெ வீக்  (EOTW COMMITTEE ) கமிட்டி மெம்பராக நம்மையும் அறிமுகம் செய்திருப்பதால் அதை அறிவிக்கவே இந்த இடுகை.

திங்கள், 20 ஜனவரி, 2020

கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை


கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை

கம்பராமாயணம் பத்தாயிரத்து ஐநூறு பாடல்களையும் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் உடையது. இதை ஒருவர் செய்யுள் வடிவில் படித்து உணர்ந்து உய்ய ஓரிரு ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள இக்கம்பராமாயணம் அவற்றின் சாறைப் பிழிந்து பக்குவமாய்ப் பருகத் தருகிறது.

கம்பன் அடிசூடி திரு பழ. பழனியப்பன் அவர்கள் எழுதிய இந்நூல் ஆறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று ஆறு காண்டங்களை ஆறு தனி நூல்களாகப் பொழிப்புரையுடன் தொகுத்திருக்கிறார்கள்.

சனி, 18 ஜனவரி, 2020

அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

அனைத்துலத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான திரு பாரதிசுகுமாரன் ஐயா அவர்களின் முகநூல் பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

///// *மகாகவி பாரதி பிறந்த நாளை எழுத்தாளர் தினமாக அறிவிக்க வேண்டும்...*
*அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தொடக்க விழாவில் கோரிக்கை.*
சென்னை.11, சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது..
எழுத்தாளர். சும்மாடு.ஜெ.வ.கருப்புசாமி வரவேற்புரையாற்ற, தமிழ்ச்செம்மல் முத்துக்குமாரசாமி அவர்கள் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருதாளர். பாவரசு.பாரதிசுகுமாரன், சங்கத்தின் நோக்கம் குறித்தும் எதிர்கால வேலைத் திட்டம் குறித்தும் கருத்துரை வழங்கிட, அதன்மீது பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்.டி.எஸ்.ஆர்.சுபாஷ், தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருதாளர். கவிஞர்.தியாரூ, திரைப்பட இயக்குநர். ஈ.ராமதாஸ், எழுத்தாளர். பெருமாள் ஆச்சி, தமிழ் இயலன், பரணி.சுப.சேகர், கவி.செங்குட்டுவன்,க.நா.கல்யாணசுந்தரம், ப.தமிழரசன்,அகநம்பி, தஞ்சை எழிலன், ஆகியோர் பேசினர்.

வியாழன், 16 ஜனவரி, 2020

கம்பன் கண்ட மனிதன்.

காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் (4.1.2020) இன்று " கம்பன் கண்ட மனிதன் " ( கம்பன் கண்ட மனிதன்/தெய்வம்/தொண்டன் ஆகிய தலைப்புகளில் மாணாக்கர்களே தேர்ந்தெடுத்தது ), என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நிகழ்ந்தது.

இந்நிகழ்வில் திருமிகு கண்ணன், திருமிகு. மா. சிதம்பரம் இவர்களோடு நானும் நீதிபதியாய்ப் பங்கேற்றேன். மிக நிறைவான நிகழ்வு.

புதன், 15 ஜனவரி, 2020

செருக்கைத் துறந்த சுகர். தினமலர் சிறுவர்மலர் - 48.

செருக்கைத் துறந்த சுகர்.
நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது.

இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆயினும் அவருக்கு பிரம்ம ஞானம் என்றால் என்ன எனப் புரியவில்லை. இது பற்றி அவர் தன் தந்தை வியாசரிடம் கேட்கிறார்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.


கம்பர் அருளிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) – ஒரு பார்வை.

இராமாயணத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். அதுவும் ஒவ்வொருவர் வசப்பட்டும் அதுவரை தென்படாத வித்யாசமான பாதை ஒன்றிற்கு அழைத்துச் செல்லும். இந்த நூலைத் தொகுத்து உரை கண்ட சொ முருகப்பனார் அது நூலாக்கம் பெறுமுன்பு இறைவனடி சேர்ந்ததால் இதற்கு நூல்முகம் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் ராய. சொ. அவர்கள்.

திங்கள், 13 ஜனவரி, 2020

பட்டாளத்து வீடு :- ஒரு பார்வை


பட்டாளத்து வீடு :- ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

2461. மரப்பாச்சி இலக்கிய வட்டம் மாதாந்திரக் கூடுகை

2462. அழைப்பிதழ் வந்தும் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. கானாடுகாத்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர் நலந்தா ஜம்புலிங்கம் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து பகிர்கிறேன்.

சொ. முருகப்பனாரும் பாரதியாரும்.

நலந்தா = நல்ல புத்தகக்கடை என்ற புத்தகக்கடையைக் காரைக்குடியில் நடத்தி வரும் திரு நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் சிறந்த எழுத்தாளர் & பதிப்பாளரும் கூட. மிக சிறந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பில் உள்ளவர். என் எழுத்தைப் பற்றி அவர் கூறியுள்ளவற்றைப் படிக்கும்போது சிறிது கூச்சம் ஏற்பட்டது. அதோடு சொ. முருகப்பனாரின் இராமகாதை பற்றியும் கூறி  இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


(இந்தப் புகைப்படம் பாரதி காரைக்குடி வந்தபோது எடுத்தது. பாரதியாரின்  வலது பக்கம் இராய சொ அவர்களும் இடது பக்கம் சொ முருகப்பனாரும் அமர்ந்திருக்கிறார்கள். )

சனி, 11 ஜனவரி, 2020

அன்பெனும் பிடிக்குள்..


அன்பெனும் பிடிக்குள்..


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

சிவகங்கைப் புத்தகத் திருவிழாவில் எனது நூல்கள்.

சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புத்தகக் கண்காட்சி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 

இக்கண்காட்சியில் சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகள் அரங்கில் எங்கள் நூல்களும் விற்பனைக்கு உள்ளன. 

வெள்ளி, 10 ஜனவரி, 2020

காக்கைச் சிறகினிலே - ஒரு பார்வை.

காக்கைச் சிறகினிலே - ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 9 ஜனவரி, 2020

புதுவயல் கைலாஸ விநாயகர் கும்பாபிஷேக மலரில் எனது பாடல்.

நேற்று புதுவயல் கைலாஸ விநாயகர் கோயில் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது. மலருக்கு பாடல் ஒன்று எழுதிக் கேட்டிருந்தார்கள். மூன்று மாதம் முன்பு அனுப்பியிருந்தேன். நேற்று மலருக்குக் கட்டுரை பாடல் எழுதியவர்களுக்கு மேடையில் சிறப்பு செய்தார்கள்.

கோவிலூர் சீர் வளர் சீர் திரு மெய்யப்ப ஞான தேசிக ஸ்வாமிகள் தலைமையேற்க , திரு சபா அருணாசலம் உரையாற்றினார். இன்னும் பலர் பேசியதும் மலர் வெளியிட்டதும் சீக்கிரமே முடிந்துவிட்டது. நாங்கள் 5 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றோம்.



நான் போடியம் பின்னே நின்றதால் தலைவரால் இருந்த இடத்திலிருந்து புகைப்படம் எடுக்க இயலவில்லை . அதனால் வீடியோ மட்டும். :)

செவ்வாய், 7 ஜனவரி, 2020

மனோசக்தி - ஒரு பார்வை.

மனோசக்தி - ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

திங்கள், 6 ஜனவரி, 2020

பேபி பூமர்ஸ் + ஜெனரேஷன் எக்ஸ் வெர்சஸ் மில்லென்னியல்ஸ் + ஜெனரேஷன் இஸட்.

பேபிபூமர்ஸும் மில்லெனியல்ஸும்.

அதென்ன பேபி பூமர்ஸ் என்கின்றீர்களா. அவங்க தாங்க 1940 களில் வதவதன்னு பிள்ளைகளைப் பெத்துப் போட்ட சமூகம். அப்ப மில்லெனியல்ஸுன்னா என்னன்னு கேக்குறீங்களா. சொல்றேன். 1980 களில் அரசாங்கம் பெருகிவரும் மக்கள் தொகையைக் குறைக்கக் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டமா ”நாம் இருவர் நமக்கிருவர்”னு அறிவிச்சுது. 2000 ஆம் வருடங்களில் ”நாம் இருவர் நமக்கு ஒருவர்”னு அறிவிச்சுது. இப்ப 2020 களில் நம்ம இளைய சமூகம் நாமே இருவர் நமக்கேன் ஒருவர் அப்பிடின்னு கேக்குற நிலைக்கு வந்திருக்கு. இவங்கதான் இந்த மில்லென்னியல்ஸ்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

படச்சுருள் - ஒரு பார்வை.


படச்சுருள் – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 2 ஜனவரி, 2020

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன். தினமலர் சிறுவர்மலர் - 47.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன்
இக்காலத்தில் ஒருவர் நோய் நொடியின்றி ஐம்பது, அறுபது ஆண்டுகள் முதல் நூறாண்டுகள் வரை எளிதில் வாழலாம். ஆனால் ஒரு மனிதன் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் மூவாயிரம் பாடல்களும் எழுதி இருக்கிறார். அவர் யாரென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே. வாருங்கள் அவர் பற்றிச் சொல்லுகிறேன்.
திருவாடுதுறை என்னும் ஊரில் மூலன் என்றொரு ஆயர் இருந்தார். அவ்வூரின் அருகில் இருந்த சாத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த குடும்பஸ்தர்களின் ஆநிரைகளை அதிகாலையில் வீடுதோறும் சென்று ஓட்டிக்கொண்டு பகல் பொழுதில் புல்வெளிகளிலும், காடுகளிலும், உழவு முடிந்த வயல்களிலும் மேய்த்து மாலையில் அதனதன் இல்லம் கொண்டு சேர்ப்பது அவர் பொறுப்பு.
அப்படி மேய்த்துவரும்போது ஒருநாள் மாலையாகியது. ஆநிரைகள் வீடு திரும்ப வேண்டும். அவை தம் மேய்ப்பரைத் தேடிக் குரல் எழுப்புகின்றன. அந்தியோ மங்கி வருகின்றது. ஆனால் அவரைப் பாம்பு ஒன்று தீண்டியதால் மேய்ச்சல் நிலத்தில் விழுந்து கிடக்கிறார். ஆநிரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தம் மேய்ப்பர் விழுந்து கிடப்பதைப் பார்த்து அவலக் குரல் எழுப்புகின்றன. சில மோந்து பார்க்கின்றன. ஒரு சிலவற்றின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது.

புதன், 1 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடிக் கிளை)  கூட்டத்தில் எழுத்தும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்வு.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடி-சிவகங்கை ) மாவட்டத்  தலைவர் திருமிகு ஜீவ சிந்தன் அவர்கள் உரையாடும்படிக் கேட்டு  இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார்கள்.

கிட்டத்தட்டப் பன்னிரெண்டு ஆண்டுகளாக காரைக்குடியில் செயல்படுகிறது இச்சங்கம் . வாராவாரம் சனிக்கிழமைகளில் த.மு.எ.ச. வின் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் முன்பு காலமான த.மு.எ.ச. நிறுவனர் டி. செல்வராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.