முத்துக்கமலம் இணைய இதழ்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.

தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.com/2017/07/2017.html

இக்கட்டுரை ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.

"தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். "

எனவே மின்னிதழ்கள், இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக, நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள், இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,  இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள், பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்

/////திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், வல்லமை,அதீதம், முத்துக் கமலம்,  வலைச்சரம்,  சுவடு, பூவரசி, தகிதா, புதிய” , அவள் பக்கம்தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல், கவிசூரியன்.////

ஏ 4 தாளில் நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என் வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான தகவல்கள் வெளியாகும்.

எனவே உங்கள் மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன் ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

எல்லா மின்னிதழ்கள் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.

வரும் ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள் எனக்குக் கிடைத்தால் நலம்.

அன்பும் நன்றியும்,

தேனம்மைலெக்ஷ்மணன். 


என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


முதலில் அனுப்பிய முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியருக்கு நன்றிகள்.


முத்துக்கமலம் இணைய இதழ்

சென்னையில் இருப்பவர்களில் ஓரிருவர் மட்டும் தமிழ் இணைய இதழ் தொடங்கிய

காலத்தில், சென்னைக்கு வெளியில் தேனியிலிருந்து மு. சுப்பிரமணி முதன்

முதலாகக் கடந்த 01-06- 2006 முதல் முத்துக்கமலம் எனும் பெயரில் தமிழ் இணைய

இதழ் (www.muthukamalam.com) ஒன்றினைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து

வருகிறார். இதன் வெளியீட்டாளராக உ. தாமரைச்செல்வி இருக்கிறார். மின்னிதழ்

குறித்துப் பலரும் அறியாத நிலையில், இணையத்தில் கிடைக்கும் பல்வேறு

மின்னஞ்சல் முகவரிகளுக்கு ‘முத்துக்கமலம்’ இணைய இதழின் ஒவ்வொரு

புதுப்பித்தலுக்கும், புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் குறித்த

தகவல்களை அனுப்பி அதனைப் பார்வையிடச் செய்வதற்காக ஐந்தாண்டுகள் வரை

தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கில மொழியிலான

இணையதளங்களைப் போல தமிழ் இணையதளங்களுக்கு விளம்பர வருவாய்

எதுவும் கிடைக்காத நிலையிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்தப் பெற்று

வருகிறது. முத்துக்கமலம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்வேறு

முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 12 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஒவ்வொரு

புதுப்பித்தலிலும் இடம் பெறும் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்புகளிலான

படைப்புகளில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதனை எழுதியவருக்கு நூல் ஒன்று

பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பிற தலைப்புகளிலான படைப்புகளுக்கும் நூல்

அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள் பரிசு அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு

வருகின்றன.

பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

1521. நேற்றும் ஈவினிங் டிவியில் பொன்வண்டு என்ற அறுதப்பாடாவதிப் படம் பார்த்தோம். எனக்கு அதில் பிடித்த ஒரே அம்சம் அதன் ஹீரோவின் பெயர் “கண்ணன்”.

1522. பாராட்டணும்னா கை தட்டணும். அது ஏன் டேபிளை ஒடைக்கிறாங்க. :)

1523. எதேச்சையா சானல் மாத்தினா

ஏன் அவ்ளோ பேரும் கண்டெக்டர் மாதிரி ஒரு பை மாட்டிட்டு வீட்ல உக்காந்திருக்காங்க. :)

1524. பெருமையோ சிறுமையோ என்றோ நிகழ்ந்த ஒன்று, இன்றைய நட்பை உடைக்கப் போதுமானதாயிருக்கிறது..

1525. ada super apo nan driving kathukirennu veetla irukavangkala padutha vendam..
....... net leye ukkarnthu kannu ponalum pogamudiyum...

#google smart CAR WITHOUT driver.

சனி, 29 ஜூலை, 2017

சாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. இருங்கோவேள் சொல்லும் யோசனைகள்.


நண்பர் திரு இருங்கோவேள் அவர்களின் இவ்விடுகை மிகமுக்கியம் என்பதால் இன்றே இரண்டாவது சாட்டர்டே போஸ்டாக இதையும் வெளியிடுகிறேன். 

கண் புரை (கேட்டராக்ட்) -

வருவதை தவிர்க்க முடியுமா? - ஓர் விளக்கம்

கட்டுரை ஆசிரியர்:
அ போ இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா,
சென்னை 600 006.

800px-Shushrut_statue.jpg

மனிதகுலத்தில் முதன் முதலாக
கேட்டராக்ட் ஆபரேஷன் செய்த கண் மருத்துவர் சுஸ்ருதர்
ரு இளைஞர் ஒரு கண் மருத்துவரைப் போய் பார்த்து, என் தாத்தாவும் என் அப்பாவும் கண்ணில் கேட்டராக்ட் வந்து ஆபரேஷன் செய்து கொண்டார்கள். கண்ணே இத்துணூண்டு உடல் உறுப்பு, அதிலே ஆபரேஷனா? நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த கேட்டராக்ட்டே வராம இருக்க ஏதாச்சும் செய்ய முடியுமா?ன்னு கேட்டார்..

டாக்டர் சிரித்துக் கொண்டே, ”கேட்டராக்ட் பற்றி பயம் வேண்டாம் ”, என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.

1. கேட்டராக்ட் பொதுவாக வயோதிகம் காரணமாக வருவதாக பலரும் நினைத்தாலும், அது மட்டுமே காரணமில்லை. உண்மையைச் சொல்வதானால், இதனால்தான் கேட்டராக்ட் வருகிறது என்று என்று இன்று வரை யாரும் உறுதியாக அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. (Cataract is still unknown etiology).

2. கேட்டராக்டை குணப்படுத்த முடியும் - தவிர்க்க முடியாது, ஆனால்
உங்களுடைய நடவடிக்கைகளை, வாழ்க்கை முறைகளை முறைப்படுத்துவதன் மூலம்(லைஃப் ஸ்டைல்) தாமதப்படுத்த முடியும்.

சாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகில் ஆஸ்வின் ஸ்டான்லி


சாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகில் ஆஸ்வின் ஸ்டான்லி 

என் அன்பிற்கினிய செல்லக்கிளி ஆஸ்வின் ஸ்டான்லி ஒரு உற்சாகப் பந்து. இந்தரி சுந்தரி என்று எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். எப்போதும் ஆனந்தமாயிருப்பது எப்படின்னு இவங்ககிட்டத்தான் கத்துக்கணும். என்னுடைய சாதனை அரசிகளில் ஒருவர். குஜராத்துல இந்தப் புள்ளிமானோட வனத்துக்கே போய் இவங்கள சந்திச்சிருக்கேன். ( அமுல் சாக்லெட்டுகளால் மூழ்கடிச்சிட்டாங்க ) 

இவங்க இருக்கும் துறை சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டதுன்னாலும் அடிப்படையிலேயே இவங்க இயற்கை ஆர்வலர். இவங்களாலதான் நம் கடலோரங்கள் மண் அரிப்பிலேருந்து பாதுகாக்கப்படுது. அதுனால இவங்களுக்கு வாழ்த்து சொல்லிக்குவோம்

இவங்ககிட்ட சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது இத எழுதித் தந்தாங்க. இன்றைய அவசியத் தேவை இந்த விஷயம்
 
குஜராத் - ஜர்வானி நீர்வீழ்ச்சியில் ஒரு நாள் இயலுலகு தழுவல்
ஹு ரே ! ஹு ரே ! இட்ஸ் ஹாலி ஹாலிடே; வாட் வேர்ல்ட் ஆஃப்  பஃன் ஃபார் எவ்ரி ஒன் ஹாலி ஹாலிடே….!
எனக்கு மிகவும் பிடித்த இந்தபோனி எம் மின் பாடலை கேட்காதவர்கள் இருக்க வாய்ப்பு குறைவு தான். விடுமுறை தினங்கள் மிக இனிமையானவை. எனக்கு மழைக்காலம் என்றால் அது காடுகளில்  சுற்றி திரிந்து மகிழும் நேரமாகும். குஜராத்தில் மழை காலங்களில் பல மலை முகடுகளில் வழியே நீர் சுரந்து அருவியாய்  கொட்டி வழிந்தோடும். இவற்றில் பல இடங்கள்  சுற்றுலா குறித்த விபரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாத கன்னி இடங்கள் ஆகும். இத்தகைய இடங்களை தேடி சென்று மலைகளையும், குன்றுகளையும் ஏறி இறங்கி, உள்ளூர் காடு வழிகாட்டிகளுடன் களித்துக் கொண்டாடுவது என் மழைக்கால பொழுது போக்கு

ஜர்வானி நீர்வீழ்ச்சி, குஜராத்தில் உள்ள நர்மதா ஜில்லாவின், நந்தோட் தாலுக்காவில், திற்கடி கிராமத்தில் அமைந்துள்ளஷூல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. இந்த சரணாலயம் சுமார் 607 sq km நிலப்பரப்பில் அமைந்துள்ள அரை பசும் மரங்கள் கொண்ட இலையுதிர் வனமாகும். இங்கே கிட்டத்தட்ட 575 செடிகொடிகளும்,  வன விலங்குகளான  தேனுண்ணும் கரடிவகை-ஸ்லோத் கரடிகள், சிறுத்தைகள்,  கழுதை புலிகள், காட்டு நாய்கள், அழிவின் விளிம்பிலிருக்கும் குரைக்கும் மான் வகை மற்றும் ரீசஸ் குரங்குகள் பொதுவாக காணப்படுகிறது.

நீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.

நீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.
காந்திதேசம் என்றொரு அருமையான நூலை எழுதிய ஆசிரியர் திருமலை அவர்கள் இன்னும் பல்வேறு விழிப்புணர்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்கள். 35 ஆண்டுகளாக எழுத்துப்பணி ஆற்றி வரும் இவரது கட்டுரைகள் துல்லியமான புள்ளி விபரத்துடன் இருக்கும். நேரடியாக் களத்தில் இறங்கி விபரங்கள் சேகரிப்பதும் அருமையான வாசிப்பனுபவமும் கைகொடுக்க இந்நூலையும் ஒரு ஆவண நூலாகப் படைத்துள்ளார்.

பண்டைக்காலத்திலிருந்து இன்றைக்காலம் வரை நீர் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது. நீர் சேமிப்பு, நீராதாரங்கள், அவை இருந்த இடங்கள் அவற்றை எப்படி உருவாக்கினார்கள். இன்று அவை எவ்வாறு மறைந்தன அவற்றினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் அவற்றைத் தவிர்ப்பது எப்படி, மென்மேலும் நீர்வளத்தைத் தக்கவைக்க என்னென்ன செய்யலாம், அவற்றின் பராமரிப்பு என்பதை ஆக்கபூர்வமாக அலசுகிறது இந்நூல்.

பொதுமக்களும் அரசும் கைகோர்த்துச் செயல்பட்டால்தான் இதன் உண்மையான வெற்றி சாத்தியப்படும். சென்னையிலும் மதுரையிலும் எத்தனை எத்தனையோ கண்மாய்களும் ஏரிகளும் கால்வாய்களும் எப்படி மறைந்தன என்று இவர் கூறும் தகவல்கள் வருந்தவைக்கும் ரகம். இதனால்தான் சுனாமி போன்ற வெள்ள அழிவுகள் ஏற்பட்டு ஊரே நாசமானது. அதேபோல் இன்றைய வறட்சிக்கும் இதேதான் காரணம்

நீர் சம்பந்தப்பட்ட நீர்க்கோள், மாமூல்நாமா, வாரபந்தி, சுருங்கை, கலிங்கு, குமிழித்தூம்பு, கொறம்பு, கற்சிறை, பாசிபட்டம், குழிகுத்தி, திருவோடிப்புறம், குளப்பட்டி, தூம்புகள், தசபந்து, மடை, குமிழி, மதகு, முறைப்பானை, குமுழிப்பள்ளன், நீர்க்கீய்ந்த வண்ணம் ஆகிய அருஞ்சொற்பொருள்களைத் தெரிந்துகொள்ள வேண்டியே இந்நூலை வாசியுங்கள்

மேலாண்மை என்றால் என்ன, அறிஞர்களின் கருத்துக்கள், புவி வெப்பம், கோயில்களின் அருகில் நீர் நிலைகள், ஆறு, குளம், வாய்க்கால், ஏரி ( கண்மாய் ) கிணறு ஆகியவற்றின் வகைகள், நீர்வழிச் சூத்திரம், நீர் நிலைகளின் பெயர்கள், குடி மராமத்து முறை, பிடாகை முறை, மடை அடைப்பவர்களை அழைக்கும் பெயர்கள், நீர்க்கட்டிகள், நீர்ப் பழமொழிகள், நீர் பற்றிய சொல்வழக்குகள், மன்னர்கள் காலத்துப் பாசனம், அவர்கள் வழங்கிய நிலங்களுக்கும் பாசனம் செய்ய நீர்நிலைகளை சாசனம் செய்தது, நீர்மேலாண்மையின் அரசு, சமூகம், தனிநபர் ஆகியோரின் பொறுப்பு விவரிக்கப்படுகிறது

இன்னும் சில ஆண்டுகள் இதே தொடர்ந்தால் நீர் சேமிப்பைத் தகுந்த முறையில் செய்யாவிட்டால்  உணவு உற்பத்தியில் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் மட்டுமல்ல மிகுந்த வறட்சியில் சிக்கித் தவிக்க நேரும் எவ்வுயிரும் உயிர்வாழ்வதற்கே அச்சுறுத்தலாகும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்

மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு ஊரில் தண்ணீர் கொண்டுவரவேண்டியே ஆண்கள் பலதிருமணங்கள் புரிகிறார்கள் என்பது அதிர்ச்சிச் செய்தி. நீர்மேலாண்மை பற்றிச் சினிமாக்களில் இருந்தும் மேற்கோள் காட்டி உள்ளார்

இவர் பகிர்ந்திருந்த பல்வேறு சங்ககாலப் பாடல்கள் , இலக்கியங்களில் இருந்து இந்தப் பாடல் மிகவும் பிடித்தது. நீர்மேலாண்மையைப் பற்றி அன்றே பாடி இருக்கிறார்கள்

1600 ஆண்டுகளுக்கு முன்பு காரியாசான் என்பவர் எழுதியது ( பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில்

குளந்தொட்டுக் கோடு பதித்து, வழி சீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி, - வளந்தொட்டுப்
பாகு படும்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத் தினிது ( 66 ) 

இதைப் பின்பற்றினால் என்றும் இன்பமே.  முழுமையான இந்நூலைப் படித்துப் பாருங்கள். நீர்மேலாண்மையில் நம் ஒவ்வொருவரின் கடமையும் என்ன என்பது தெள்ளென விளங்கும்

நூல் :- நீர்மேலாண்மையைத் தேடி
ஆசிரியர் :- . திருமலை
வெளியீடு :- தமிழர் ஆய்வு மையம்
விலை :- ரூ 50/-