புதன், 15 ஜூன், 2016

2015 இன் சிறந்த நூல்களுக்கான போட்டிகள் - தமிழ் வளர்ச்சித் துறை.

தமிழ் வளர்ச்சித்  துறை வெளியிட்டிருக்கும் போட்டியினை எனது முகநூல் நண்பர் திரு குருப்ரசாத் அவர்கள் அனுப்பி இருந்தார்கள்.

2015 இல் நூல் வெளியிட்டவர்களின் கவனத்துக்காக அனுப்பி உள்ளேன். 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசு வழங்கப்படுகிறது. எழுத்தாளருக்கு 30 ஆயிரமும், பதிப்பகத்தாருக்கு 10 ஆயிரமும் பரிசு.

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் & விதிமுறைகளை www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்,
தமிழ் சாலை,
எழும்பூர்,
சென்னை - 8

இந்த முகவரியிலும் விண்ணப்பப் படிவங்கள் பெறலாம்.



விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வெளியிட்ட 10 நூல்கள், போட்டிக் கட்டணம் 100/- ரூபாயை வங்கி கேட்பு காசோலையாக ’தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை’ என்ற பெயரில் அலுவலகத்தில் அதற்கான ரசீதுடன் நேரிலோ போஸ்ட் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

ஆகஸ்ட் 10 க்குள்ள அனுப்பி வைங்க.




https://www.facebook.com/photo.php?fbid=1144015992286020&set=a.494871920533767.108876.100000328896706&type=3&theater

தமிழ் வளர்ச்சித்துறைக்குப் பாராட்டுகள். பங்களிப்பு செய்து வெற்றிபெறப்போகும் எனது நட்பூக்களுக்குப் பூங்கொத்துகள்.

4 கருத்துகள்:

  1. நாளிதழ்களில் செய்தியைப் பார்த்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)