வியாழன், 10 டிசம்பர், 2015

மாலை நேரப் பறவை.



16.9.86.

நேரமோ
வெள்ளமாய்ப் பொங்கும்.


மாட்டின் வாய்
உணவாய் மனசு.

குகையுள்
நடுங்கும் தீபமாய்
ப்ரஸன்னமாகும்
உன் நினைவு.

கொட்டிலுக்குள்
மழைநீராய்
கலங்கும் இருப்பு.

மனமோ
மாலைநேரப் பறவைகளாய்க்
கூட்டுக்குள் வரவிருக்கும்
உனை
எதிர்பார்த்து. 


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)