வெள்ளி, 18 நவம்பர், 2011

பத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.

பத்மா இளங்கோ..:-

எங்க திருமணத்தில் முதல் நாள் ஜானவாசத்தில் பெண்ணை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக திருமணமண்டபத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போ அந்த கார் முழுக்க குழந்தை குட்டிகள் எல்லாம் ஏறி உக்கார்ந்துகிட்டாங்க..
பெண் அமர ஏன் நிற்கக் கூட இடம் விடலை எந்தக் குழந்தையும்.. டேய் பசங்களா பெண்ணுக்குத்தான் இந்தக் காரை ஏற்பாடு செய்திருக்காங்க. அட்லீஸ்ட் மணப்பொண்ணு நிக்கிறதுக்காகவாவது இடம் கொடுங்கப்பா என்று சொன்னவுடன் சிறிது இடம் கொடுத்தாங்க அந்த குட்டீஸ்.. இன்னிக்கும் எங்க மணநாள் ஞாபகம்னா அந்தக் காட்சிதான் வரும். அதைத்தான் சொல்லிச் சொல்லி சிரிப்போம்.

6 கருத்துகள்:

  1. ஆமாம்க்கா... ஏன் மாப்பிள்ளை அழைப்பில பொண்ணு மாப்பிள்ளையை தனியா விடாம எல்லா வாண்டுகளையும் கூடவே பார்சல் பண்றாங்க? இன்னும் எனக்கு விடை தெரியாத கேள்வி இது. நல்ல கலாட்டா போங்க...

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து திருமண பதிவா இருக்கு ?

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹாஹா நல்ல கேள்வி கணேஷ்..:)

    நன்றி ராஜா.. இது இவள் புதியவளுக்காக நான் எடுத்த பேட்டிகள்..:)

    நன்றி ராஜி..:)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)