வியாழன், 17 செப்டம்பர், 2009

காதல்

மகிழ்ச்சி குமிழ்குமிழாய்
காற்றில் பரவி
வீடு முழுதும்
பொங்கி வழிந்து...

கடலுள் களிக்கும்
டால்பின் மீனாய்
நீச்சல்லில்லாத
மிதக்கும் வட்டாய்...

இதயத்தில் இருந்து
வெடித்துக்கிளம்பி
பார்வைகள் வழியே
ரோஜாக்கள் விரிந்து...

அலையடித்த சிரிப்பு
இருவர் மேலும்
மேலும் மேலும்
மேலும் உரசி...

கஜலும் கவ்வாலியும்
காதில் ஊடுருவி...
கம்பீரமான ஆளுமையில்
கவனத்தை ஈர்த்து...

முகத்தின் ப்ரகாசத்தில்
வீடே ஜொலிப்பாய்...
காதலின் மணத்தில்
நிறைந்த வாசம்...
நெஞ்சத்தில் இதமாய்...

மூளையை இளக்கி
உள்ளுக்குள் வினோத சுனாமி...
உயிருக்குள் பூகம்பம்...
தவிர்க்க இயலாத தவிப்பே,
இதுதான் காதலா...?

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)