வியாழன், 4 மார்ச், 2021

சில்வர் ஃபிஷ் ஸ்டாலில் எனது நூல்கள்.

 சென்னையில் நடந்து வரும் 44 ஆவது புத்தகக் கண்காட்சியில் நம்பர் #2, சில்வர் ஃபிஷ் ஸ்டாலில் எனது நூல்கள் ( எட்டு நூல்கள் ) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


திருமதி வள்ளி அருணாச்சலமும் அவரது கணவரும் இணைந்து சில்வர்ஃபிஷ் என்னும் பதிப்பகத்தை நடத்தி வருகிறார்கள். இவரது 40 ப்ளஸ் என்ற நூலும் வெளியாகி உள்ளது. யூ ட்யூபில் நூல் விமர்சனம் செய்து வருகிறார். அடிப்படையில் இவர் ஒரு மென்பொறியியலாளர். ( டீம் லீடாக இருக்கிறார் ) 


புத்தகங்கள் விற்பனை நன்றாக உள்ளது என்று கூறினார். எனது பெண் பூக்கள், அன்னபட்சி, காதல் வனம், பெண் அறம், மஞ்சளும் குங்குமமும், பெண்மொழி, கீரைகள், ஆத்திச்சூடிக் கதைகள் ஆகிய எட்டு நூல்கள் அங்கே கிடைக்கும். வாங்கிப் படிச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க மக்காஸ்.


தோழி ஏர்னஸ்டின் கணவர் திரு அருளானந்த குமார் சார் புக் ஃபேரில் என் நூல்களைப் பார்த்து எடுத்து அனுப்பிய ஃபோட்டோ இது. !!! நன்றி சார். !

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)