ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அன்பிற்கினிய ஆசிரியை அலமு அத்தை.




என் காதல்வனம் புத்தக வெளியீட்டின் போது எங்கள் உறவினரும் ஆசிரியையுமான அலமு அத்தையிடம் பாராட்டுக் கிடைத்தது. அம்பத்தூரில் வாழ்ந்து வரும் அவர் பட்டிமன்றங்களிலும் தலைமை ஏற்றிருக்கிறார். தீர்க்கமான சிந்தனைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தக்காரர். 





அவர் என் எழுத்துக்களைப் பற்றி அழகான விமர்சனம் ஒன்றைச் செய்தார். அது என் வாழ்வின் பெரும்பேறு. அந்தப் புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 





என் அம்மாவின் அம்மான் மகள் அவர். என்னைச் சரியாகப் புரிந்து கொண்டமைக்கும் நிகழ்வுக்கு வந்து சிறப்பித்தமைக்கும் செறிவான உரைக்கும் நன்றி அத்தை. 







அழகான புகைப்படங்களுக்கு நன்றி அருளானந்த குமார் சார் . நிகழ்வை நன்கு வடிவமைத்து நடாத்தியமைக்கு நன்றி வேடியப்பன் சகோ. 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)