ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

ஊருக்கு அணி செய்யும்
பயிருக்கு உயிர் செய்யும்
உயிருக்கு நீர் வார்க்கும்
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

பாரெல்லாம் பயன் பெறவே
தூரெடுத்துத் தூர் வார்த்து
கரைகொண்டு கரை சேர்த்து
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.


நிலத்தடி நீர் சேமித்து
நீர்வரத்தைச் சீர் படுத்தி
ஊர்உய்ய உயிர் கொடுக்கும்
ஊரணிக்கு உயிர் கொடுப்போம். 

2 கருத்துகள்:

  1. எங்கெல்லாம் ஊரணிகள் இருக்கின்றன என்னும் விபரமே தெரியலையே

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)