செவ்வாய், 20 அக்டோபர், 2015

உழைப்பின் சிறகுகள்



2.5.86.

22. ஜன்னலோரத்தில்
பூத்து நிற்கும்
மஞ்சள் மகரந்தம்,
தினமும் ஒரு
புத்துணர்ச்சியை
என்னுள் விதைக்கும்.


பக்கத்தில்
சாகுபடி செய்யப்படும்
கடலைச் செடிகள்
கம்பிகளூடே என்னைச் சிதைக்கும்.
நித்யக் கடமைகளாய்.

கடலைச் செடிகள்
வளர்ந்துகொண்டிருக்கும்
யாருடைய கொறித்தலுக்காகவோ.

மாலை மங்கும்
மஞ்சள் மகரந்தம்
மெல்ல உதிர்க்கப்படும்
என் உழைப்பின் சிறகுகளாய்.

செடி
இன்னொரு பூத்தலுக்காய்த்
தயாராகிக் கொண்டிருக்கும்

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)