வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆன்மாவின் உடைகள்..

வெள்ளுடை
தேவதைகளையும்
செவ்வுடை
சாமிகளையும்
மஞ்சளுடை
மாட்சிமைகளையும்
பச்சை உடை
பகைமைகளையும்

படிமங்களாய்ப்
புதைத்தவற்றை
வர்ணாசிர தர்மமாய்
வெளியேற்றும்
ப்ரயத்னத்தில்..

 ப்ரக்ஞையோடு
போராடித்
தோற்கிறேன்..

விளையாட்டையும்
வினையாக்கி
வெடி வெடித்துத்
தீர்க்கிறேன்..
எப்போது உணர்வேன்
வண்ணங்களை..,
அழுக்கேறாத
ஆன்மாவின் உடைகளாய்.

 டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூலை 3,2011 திண்ணையில் வெளியானது.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)