வெள்ளி, 4 நவம்பர், 2011

அடையாளக் குறிப்பு.

தாலி., மெட்டி
மோதிரம்., குங்குமம்.
திருமணத்தின்
அடையாளக்குறிப்பாய்
நான் மட்டும் சுமந்து..



ஓட்டுப்போடும்
இடத்திலாவது
உனக்கும் சேர்த்து
கரு மையால்
அடையாளக் குறியிட்ட
அரசுக்கு நன்றி..

டிஸ்கி:- செப்.30,2011 அதீதத்தில் வெளியானது.

14 கருத்துகள்:

  1. ஆண்பிள்ளையின் முகத்தில் அசடு வழிவதே திருமணம் ஆனதற்கான அடையாளம்தானேக்கா... வேறு தனியாக வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  2. அது சரி. என் மனைவி இவற்றை அவள் பாதுகாப்பு, மரியாதைக்கு என்கிறாள். என்க்கே இரண்டும் தேவையில்லையாம்

    பதிலளிநீக்கு
  3. அட, சரியாச் சொன்னீங்க! திருமணமான ஆண்கள் மிஞ்சி போட வேண்டும் என்பதை மறுபடியும் கொணர்ந்தால் என்ன?!!

    பதிலளிநீக்கு
  4. ஒரேயடியாக இப்படி எங்களுக்கெல்லாம் கரும்புள்ளி குத்திவிட்டீர்களே!

    சூப்பரான கவிதை. பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  5. தாலி, மெட்டி, மோதிரம் குங்குமம் எல்லாம் சேர்ந்ததும் பெண்ணுக்கு ஒரு தனி அழகு வருதே அது நல்லாத்தானே இருக்கு தேனம்மை

    பதிலளிநீக்கு
  6. நல்ல சிந்தனை...இது எனது முதல் வரவு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அப்படியா கணேஷ்..:)

    நன்றி் ராமலெக்ஷ்மி

    நன்றி மனோ

    நன்றி அந்தோணி

    நன்றி மாதவி..:)

    நன்றி கோபால் சார்..:(

    நன்றி ரூஃபினா

    நன்றி சரவணா

    நன்றி விச்சு

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)