திங்கள், 12 டிசம்பர், 2022

நீல நிலா இதழில் வித்தகராக...

 நீல நிலா இதழில் வித்தகராக.. 


நீல நிலா என்றொரு இலக்கியக் காலாண்டிதழ் விருதுநகரிலிருந்து வெளியாகிறது. அதன் ஆசிரியர் திரு. ஷெண்பகராஜன் அவர்கள். 

இந்நூலில் அறிமுகப்படுத்துவதற்காக ஒரு முறை அவர் தொடர்பு கொண்டு எனது நூல்களைக் கேட்டிருந்தார். அனுப்பி இருந்தேன். இந்த செப்டம்பர் 2022 காலாண்டிதழில் என்னைப் பற்றி ”வித்தகர்” என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. 


இதன் பின்னட்டையிலும் என் படத்தை வெளியிட்டுச் சிறப்புச் செய்திருக்கிறார்கள். நன்றி. 

இன்னும் இரண்டு மூன்று வித்தகர்கள் இருக்கின்றார்கள் இந்நூலில். இந்நூலைப் பற்றிய விரிவான விமர்சனத்தை யூ ட்யூபில் செய்வேன். இது உணவுச் சிறப்பிதழ். மற்றும் 18 வருடங்களாக வெளியாகி வரும் சிறப்புடையது. இந்த இதழ் 52 ஆவது இதழ். 


எனது நூல்கள் பற்றி நூல் அறிமுகமும்  விலை விவரமும் கொடுத்திருக்கிறார்கள். 

வாழ்த்துக்கள் திரு ஷெண்பகராஜன் அவர்களுக்கும் ஆசிரியர் குழாமுக்கும். நன்றி நீலநிலா.!

2 கருத்துகள்:

  1. மகிழ்ச்சியும் நன்றியும் ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)