வியாழன், 25 ஏப்ரல், 2019

காதல் வனம் விமர்சனம் - திரு. நலந்தா ஜம்புலிங்கம்.

காதல்வனம் விமர்சனத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும்  நலந்தா ஜம்புலிங்கம் சார்






காதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்
********************
காதல் வனம்
ஆசிரியர் : தேனம்மை லெட்சுமணன்
பதிப்பாளர்:  படி வெளியீடு (டிஸ்வகரி புக் பேலஸ்)
சென்னை - 78      
அலைபேசி: 87545 07070 , 99404 46650
விலை ரூ.100/-
         எழுத்தாளரும் வலைப்
பதிவருமான திருமதி தேனம்மை லெட்சுமணன், சமூக வலைத்தளங்களில் தனக்கென  ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். இப்போது பல மேடைகளுக்கும் அழைக்கப்படுகிறார், மேடைகளில் மட்டுமல்ல நேரிலும் படபடவென வேகமாகப் பேசுவார்.  அந்த வேகத்தை அவரது பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் காணலாம் வேகத்திற்குக் காரணம் வேறொன்றுமில்லை, சுமையை அறிவுச்சுமையை இறக்கி வைக்கிற அவசரம் தான்.
              அவருடைய அண்மைப் படைப்பு காதல் வனம் எனும் நாவல்.  அந்த நாவல் அச்சசுப் புத்தகமாகவும் மின் புத்தமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த இரண்டு வடிவங்களிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் அந்த நாவல் வெளிவந்திருப்பதே படைப்பையும், படைப்பாளியையும், பதிப்பாளரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. அது எளிதில் கை கூடக்கூடிதில்லை, அதற்குப் பின்னர் அயராத தேடலும் உழைப்பும் இருக்கிறது.
            மிகவும் நெருடலான கதைக் கரு.  அந்த நெருடல் கருவும் தானாக வளர்கிறது ஒன்றிற்கு மேல் ஒன்றாகக்  குவிகிறது.  இந்தக் கருக்களுக்கு அப்பாற்பட்டு ஒரு சிக்கல் வேறு முளைக்கிறது.  அதற்கு விஞ்ஞானம் மூலம் ஒரு தீர்வு தெரிகிறது, ஆனால் நடைமுறைப்படுத்த கயிற்றின் மேல் நடக்க வேண்டியுள்ளது.  முட்கள் நிறைந்த இந்தக் கதைச் சாலையில் பனிச்சறுக்கு போல கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் நாவலாசிரியர் தேனம்மை லெட்சுமணன்.  இது எப்படி சாத்தியமாகிறது?
     இந்தப் பனிச்சறுக்குப் பயணத்தைச் சாத்தியமாக்குவது தத்ரூபமான களக்காட்சிகள் தான்.  அதற்கு உயிரூட்டுபவை துல்லிமான
களத்தகவல்கள் தான்.
              தேனம்மை லெட்சுமணன் ஆயிரம் சாளரங்களை திறந்து வைத்து ஆழ்வார் இலக்கியத்தியிலிருந்து, பாட்டி வைத்தியம்,  கரு முட்டை தானம், கருப்பப்பை தானம்,  டாங்கோ நடனம் வரை அகிலத்திலின் சந்து பொந்துகளில் புதைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் சேகரித்த வண்ணம் இருக்கிறார் --   ஐந்து வகையான வலைப்பக்கங்களில் அவர் எழுதியுள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான வலைப் பதிவுகளே அதற்கு சான்று.
 
     
           களத்தகவல்களால் அச்சு அசலாக நிதர்சன உலகத்தையே காட்டக் கூடியவர்கள் Arther Hailey யும்  பாலகுமாரனும்.  அவர்கள் கூட ஒரு நாவலில் ஒரு களத்தைத் தான் காட்டுவார்கள்.  தேனம்மை லெட்சுமணனின்  காதல்வனம் பல தளங்களைக் காட்டுகிறது.  கதையின் புதிர்முடிச்சு அவிழ்க்கப்படுகிறதா மேலும் முறுக்கேறுகிறதா? என்ற மயக்கத்தை கடைசிப் பக்கம் வரை சலனமின்றி தக்க வைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறர்.
         நாவல் நெடுகிலும் ஆங்கில சொற்கள், சொற்றோடர்கள். நாவலாசிரியர் சற்று கவனம் செலுத்தியிருந்தால் 50% கலப்புச் சொற்களையாவது தவிர்த்திருக்கலாம்.
             
நலந்தா செம்புலிங்கம்
15.04.2019

2 கருத்துகள்:

  1. மதிப்புரை, நூலை வாசிக்கும் எண்ணத்தைத் தூண்டியுள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)