புதன், 19 ஆகஸ்ட், 2009

அகம் புறம்

காய்ந்த துணிகளின் மேல்
காக்கை எச்சமாய்
பார்வைகள்...

மடித்து வைத்த
பின்னும் தட்டுப்படும்
கறைகளாய்...

சர்க்கரைப் பாகே
ஆனாலும் அதிகமானால்
பாகலை விடக் கசப்பாய்...

தோட்டத்துக் காய்களில்
கல்லடி...
காய்த்த மரமாம்...
பூத்தலும் காய்த்தலும்
அதன் இயல்பில்லையா...?

வனதேவதைகளை
வதைத்துவிட்டு
வம்ச விருத்தி எப்படி...?

உணர்தலும்
உணரப்படுதலுமான வாழ்வில்
இயற்கையையும் இளமையையும்
முறையற்று அணுகுவதா...?

உண்ணப் படும்
விலங்குகளே
மனிதனை உண்ணும்
உயிர்க்கொல்லிகளாய்...

காற்று மண்டலமே
கனல் மண்டலமாக
சுற்றுப்புறம் நம்மை
சுடும்முன் சுதாரிப்போம்...

உலகின் மேல் விழுந்த
காக்கை எச்சமாம்
சுவாசத்தைக் கூட
மாசு படுத்தும் வியாதிகள்...
மரவுரி உடுத்து வனவாசம்
செல்ல வேண்டாம்.

மனக் கட்டுப்பாடு வேண்டும்...,
இயற்கையையும் இளமையையும்
அனுபவிப்பதற்கு...

மனிதராய் சிந்திப்போம்...
மனிதம் தந்து
மனிதம் வாங்கி வாழ்வோம்...

3 கருத்துகள்:

  1. //உணர்தலும்
    உணரப்படுதலுமான வாழ்வில்
    இயற்கையையும் இளமையையும்
    முறையற்று அணுகுவதா...?//

    உண்மை உண்மை - சிந்தனை அருமை

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)