எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 நவம்பர், 2009

மலர்கள்

இது ஒரு 1984 அக்டோபர் மாத
கல்லூரி டைரிக்குறிப்பு.....

இலைகளுக்கு இறைவன்
கொடுத்த குடைகள்...

பச்சை உடை அணிந்து
உடலை மறைத்து
செடி காட்டும் முகங்கள்...

நடக்கத்தெரியாத வெகுளி
மனிதர்கள் பிரசவித்த
சிரிப்புக் குழந்தைகள்...

காற்றுடன் சினேகம்
செய்து கொள்ளச்
செடிகள் பூத்த புன்முறுவல்கள்...

பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...

கரும்பச்சையில்
பூத்து நின்ற
ஜிகினா நட்சத்திரங்கள்...

சனி, 21 நவம்பர், 2009

பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்

நெஞ்சில் நிறைந்தவர்களும் நெஞ்சை எரிப்பவர்களும்

அன்பு சகோதரர் விஜய்யின்
(விஜய் கவிதைகள் )ஆணைக்கு
கட்டுப்பட்டு ......
(மிகத் தாமதமாக எழுதுவதற்கு
மன்னிக்கவும் விஜய்)

1. அரசியல்வாதிகள்

பிடித்தவர் :- இந்திரா காந்தி , ஜெயலலிதா
(மிசா. பொடா, தடா தாண்டியும் பிடிக்கிறது)
தன்னம்பிக்கையின் உருவங்கள் ...
என் இந்தியத் தாய்கள்.. அன்னை ..!அம்மா..!!!

பிடிக்காதவர் :- சுவாமி., தாக்கரேக்கள்..

2, நடிகர்கள்

பிடித்தவர் :- விக்ரம் , சூர்யா. மாதவன் ,
அர்விந்தசாமி., பசுபதி....

பிடிக்காதவர் :- யாரையும் புண்படுத்த
மனமில்லை

வெள்ளி, 20 நவம்பர், 2009

பரங்கிப்பூ

இரட்டைக் குவிக்கண்ணாடியும்
நடைப்பயிற்சி மின்சாதனமும்
இரத்த அழுத்தமும் இன்னா நாற்பதை
இடித்துரைக்க ...

பரம்பரையோ
உன் கைப்பக்குவமோ
அதிகம் உண்டு கொழுப்புமேற்றி ...

நெற்களஞ்சியத்திலிருந்து
நியூதில்லியின் கரோல்பாக்
கணப்பு வீட்டில்....

மார்கழியின் திருவையாறும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒலி ஒளி நாடாக்களில் கண்டு....

பகல் பத்தும் ராப்பத்தும்
வைகுண்ட ஏகாதசியும்
ஆனித்திருமஞ்சனமும் ஏக்கமெழ வைக்க..

பத்துவிரல் கோலத்தில் பூத்த
என் பரங்கிப்பூவே...
பப்ளிமாஸே....

வியாழன், 19 நவம்பர், 2009

ஜாதிப்பூ

நவதான்யங்களிலும் எள்முடிச்சிலும்
எலுமிச்சை விளக்கிலும்
கழிந்துகொண்டே இருக்கும்...

உன் இளமை வீணாய்....
நன்னீர் முகத்துவாரம்
கடலுள் அழிவது போல்... .

உன் அன்பு வார்த்தைகள்
என்னுள் கங்கின்
கதகதப்போடு...

சூரியனைப்போல்
தீராமல் எரிந்துகொண்டே
நான்...

பாம்புப்பிடாரனின் மகுடியாய்
உன் பார்வைகளிலும்
வார்த்தைகளிலும் மயங்கி...

நேசத்தின் இழைகள்
சரங்கொத்தியாய்
இன்பமாய் வலித்து...

விடுபடமுடியாமல்
உன் அன்பெனும் ஆணிக்குள்
அழுந்தி ரத்தச்சுகத்துடன்....

புதன், 18 நவம்பர், 2009

சரக்கொன்றைப்பூ

பார்வதி ஆயா வீட்டு முகப்பு
பாத்திர வாடகை நிலையமாய்
சரக்கொன்றை சாட்சி....

பிறந்து வளர்ந்து படித்து
உனைப் பார்க்கவென்றே
அபுதாபி வந்தது போல்...

அல் அய்னில் க்ரூஸரில்
அல் மராயின் லாபான் போல்
வெண்மஞ்சளில் வந்த
லெபனிய அழகே...

கிரிஸ்டல் பேலஸின்
ஷாண்டிலியர்கள் போல
ஜொலித்த கண்களுடன்...

துபாய் மாலின்
கேண்டிலைட்டின்
அல்ப்ரோஸாய்...

புர்ஜ் அல் அராபின்
கலங்கரை விளக்கமாய் நீ
இசை நீரூற்றாய் நான்...
உன்னை எட்ட...

Related Posts Plugin for WordPress, Blogger...