எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

எமக்குத் தொழில் எழுத்து

அதிகமாய் எழுதிய
அலெக்ஸாண்டர் டூமாஸும்...
ஆத்ம சிந்தனையில்
மார்க்க அரேலியரும்
எனை ஈர்க்க...

ஷேக்ஸ்பியரும், தாகூரும்...
பார்த்திபன் கனவும்,
பொன்னியின் செல்வனும்
எனை மயக்க...

ஏழைபடும் பாடும்,
குற்றமும் தண்டனையும்
எழுத அழைக்க...

கண்ணதாசனும், தபூசங்கரும்
உரமூட்ட... யானறிந்தவற்றை
பகிர வந்தேன்.....!!!!

சுஜாதா, ஜெயகாந்தன்,
சுந்தர ராமசாமி, ஸ்டெல்லா புரூஸ்,
லா.ச.ரா, தி. ஜா.ரா.,

அசோகமித்திரன், புதுமைப்பித்தன்,
ஜெய மோகன், நாஞ்சில் நாடன்,
எஸ்.ராமகிருஷ்ணன்,

தஸ்தாயெவ்ஸ்கி
என்று எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா....!!!

மனக்குகை ஓவியங்களாகவும்,
உன்னத உணர்ச்சிகளாகவும்,
உளச் சிக்கல்களையும்
உறவுச் செறிவுகளையும்
உரைக்கும் வரைவுகளாயும்..,

கடலுள் தெரியும்
பனிப்பாறைகளாய்,
தீவுகளாயும், கூட்டங்களாயும்
உலவும் மனித மனதின்
விகாரங்களையும்,

நடப்புகளை விசனிக்கும்
நல்மனங்களையும்,
காலங்களின் உருவங்களைப்
ப்ரதிபலிக்கும் கண்ணாடியாகவும்,

மனத் தேட்டத்துக்கும்,
நன்னம்பிக்கைக்கும்
இட்டுச் செல்லும்
உருவற்ற உருவாகவும்..,

எண்ணங்களை புதுப்பிக்கும்
சிந்தனை சேமிப்பாகவும் இருப்பதால்,
என் சுயம் வெளிப்படுத்தவும்,

சிந்தனைகளை சிற்பமாக்கவும்,
எண்ணங்களை அறிவிக்கவும்
எழுத வந்தேன்...

"எமக்குத் தொழில் எழுத்து" என்ற
பாரதியின் வாக்குதனை
ஏற்றிட்டேன்....!

உங்கள் எண்ணங்களில்
மகர தீபம்
ஏற்றாவிட்டலும்

அகல் விளக்காவது
ஒளிர வைக்கமுடியும்
என்ற நம்பிக்கையில்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...