எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 ஜூலை, 2012

பெருந்தன்மைக்காரியும்., பேரறிவுக்காரியும்



பொழுதைத் தின்பவளும்
பேரறிவுக்காரியும்
சந்தித்தார்கள்.

வர்க்க பேதம் அறியா
வேலைக்காரி
மக்கிப் போன மனையறத்தாள்.

மட்டம்தட்ட
கட்டிப்போட
கொட்டில் அடங்கியது இல்லம்.


வசதிகளுக்கானது வீடு..
உடல்கிடத்த
ஓய்ந்து படுக்க..

அறிவுஜீவித் தோழிகள்
உரையாடினால்
உற்சாகம்., உல்லாசம்.

அதிகப்படி அறிவு கீறும் போது
மக்கானவள்
பெருந்தன்மைக்காரியாவாள்.

உறுத்தும் கீறல்களோடு
இக்கரைக்கு அக்கரை
பச்சை மனிதன் பார்த்து

நாவுக்குள் விழுங்கிய
நகைப்போடு நகர்கிறார்கள்
பெருந்தன்மைக்காரியும் பேரறிவுக்காரியும்.

 டிஸ்கி:- இந்தக்கவிதை ஏப்ரல் 14 2012, தமிழ்ப் புத்தாண்டு அதீதத்தில் வெளியானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...